திங்கள், 17 நவம்பர், 2008

கடவுள்

வெளியே தேடினேன்
ஆகாசத்தில் தேடினேன்
மண்ணில் தேடினேன்
கோவிலில் தேடினேன்
குருகுலத்தில் தேடினேன்
சூரியனை காட்டினர்
சிலையைக் காட்டினர்
யானையைக் காட்டினர்
சில மனிதர்களையும் காட்டினர் கடவுள் என்று.........
கண்டேன் அனைத்தையும் ........
அவற்றில்
கடவுளை மட்டும் காணவில்லை.
நாத்திகன் ஆனேன் .

வாழ்க்கை பல கடந்து
துன்பம் வந்த போது
அமைதியை தேடினேன்
அதில் கடவுள் தெரிந்தது......
என் உள்ளே இருக்கும் கடவுள் தெரிந்தது....
உணர்வாக தெரிந்தது ........
சக்தியாக தெரிந்தது.,.....
என்னை நான் புரிந்து கொண்டால்
நானே கடவுள்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக