சனி, 13 ஜூன், 2009

இந்தியன் என்ற பரந்த மனது ,
பெருமிதம் கொண்டோம் ,
தமிழனைக் கொல்லும் அவலம்
ஈழத்தில் நடக்கும் போது
எந்த இந்தியனும் கவலைப்பட வில்லை...
தமிழன்தான் பொங்கி எழுந்தான் .....
படிப்பினை...
முதலில் தமிழனாய் வாழ்வோம்.....
பிறகு இந்தியனாய் வாழ யோசிப்போம்.

ஈழத்தை அளிக்க உடந்தையாக இருந்த
  1. இந்தியா அரசாங்கம்
  2. தமிழ் நாடு குறிப்பாக கருணாநிதி என்ற தமிழ் காப்பாளன் (தமிழுக்கு வித்திட்ட துரோகி )

இவர்களை தமிழ் சரித்திரம் என்றைக்கும் மன்னிக்காது ...... இலங்கை அரசாங்கத்தை விட இவர்கள் விஷம் வாய்ந்தவர்கள்.......

சவால் விடுகிறோம்:

தமிழ் நாடே......

இந்தியா அரசாங்கத்தை விட்டு வெளியே வா.....

தனி நாடாக நிமிர்ந்து எங்கள் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்...

ஈழத தமிழர்களுக்கு உதவி கரம் நீட்டு.....

தமிழன்

திங்கள், 16 மார்ச், 2009

நமது எஸ்.பி.எம் மற்றும் எஸ்.தி.பி.எம் மாணவர்களுக்கான இலவச ஆலோசனை சேவைக்கு :
http://www.sehgar.blogspot.com
அல்லது மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்க :
sehgar28@hotmail.com

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

தமிழ்ப்பள்ளிகளுக்கு 1600 தற்காலிக ஆசிரியர்கள்

தமிழ்ப்பள்ளிகளுக்கு 1600 தற்காலிக ஆசிரியர்கள் என்ற செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்ததை அறிவோம்.

இது பெருமைக்குரிய செய்தி அல்ல, மாறாக நம் சிந்தனையைத் தூண்ட வேண்டிய விஷயம்.

  1. என் இந்த தற்காலிக ஆசிரியர் நியமனம்.......பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்க தவறிய கல்வி அமைச்சை சாடுகிறேன்.
  2. கடந்த காலங்களிலும் இதே பிரச்சனை தமிழ்ப்பள்ளிகள் எதிர் நோக்கி வந்துள்ளன என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
  3. நாடு தழுவிய நிலையில் பல இந்தியர்கள் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் கல்வி அமைச்சு ஒரு வருடத்திற்கு ஏறத்தாள 200 இடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. என் இந்த ஓரவஞ்சனை.........
  4. அறிவியல் மட்டும் கணித ஆசிரியர் பயிற்சிக்கு மிகக் குறைவான இந்தியர்களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.என் இந்த நிலைமை? இதனால் எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளில் வேற்று இன ஆசிரியர்களே அதிகமாக பனி புரிவார்கள்....
  5. அரசியல்வாதிகளே...... நமது iனத்தின் பிரதிநிதிகளே...... நமது உரிமைகளே தட்டிக் கேட்க உங்களை தேர்ந்தேடுத்தோம். எழுந்திரு....விழித்திரு....

செவ்வாய், 9 டிசம்பர், 2008

வாழ்க்கை நம் கையில்



"WE ARE THE PRODUCT OF OUR OWN CHOICE "


  1. வாழ்க்கையில் கடவுள் என்ற சக்தி நமக்கு ஒரு முக்கியமான வரம் அளித்துள்ளார் . அது என்ன ?

  2. அதுதான் முடிவெடுக்கும் திறன். (DECISION MAKING)

  3. தினமும் ஆயிரம் கணக்கான சூழ்நிலையில் நாம் பல முடிவுகளை எடுக்கின்றோம். அந்த முடிவுகளினால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை அடைகின்றோம்.இறுதியாக அதுவே நம் வாழ்க்கையின் தோற்றமாக நாம் காண்கிறோம்.

  4. சூழலுக்கு ஏற்ப நல்ல முறையில் துலங்குபவன் வாழ்க்கையில் நல்ல நிலையை அனுபவிப்பான்.

  5. இன்றைக்கு நீங்கள் பல சூழல்களை சந்திப்பீர்கள் .....அதற்கு ஏற்ப நீங்கள் நல்ல முடிவுகளைக் கொண்டு துலங்க வேண்டும்.......அப்பொழுதுதான் நல்ல ஆக்கபூர்வமான முடிவுகள் உங்களுக்கு கிட்டும்.

  6. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

  7. இதுவே வாழ்க்கையின் அடிப்படை சட்டம்.


சனி, 6 டிசம்பர், 2008

தமிழ்ப்பள்ளி பாகம் 2

தமிழ்ப்பள்ளியை மூடினால் :
  • தமிழ் மொழியை வேறு எவ்வாறு வளர்ப்பது....தேசிய பள்ளி வளர்க்குமா....?
  • தேசியப் பள்ளியில் நாம் சரஸ்வதி பூஜை நடத்த இயலுமா...
  • தேசியப் பள்ளியில் தமிழ்ப் பள்ளியைப் போல் பல தமிழ் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலுமா......
  • இந்தியர்கள் அரசாங்கத் துறையில் அதிகமாக பனி புரிவது இந்த ஆசிரியர் தொழில்தான் ......தமிழ்ப்பள்ளியை மூடினால் நமக்கு வேறு அரசாங்கத் துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா......
  • தமிழ்ப்பள்ளியை மையமாக கொண்ட பல வியாபாரத் துறைக்கு ஏற்படும் நிலை என்ன............

தமிழ்ப்பள்ளியை மூட வேண்டும் என்று ஆதரிக்கும் இந்தியர்களே ............. இந்த நாட்டில் நமது இனத்தின் அடையாளத்தை மறைத்திட பலர் திட்டமிட நீங்கள் அதற்கு தூண்டுகோலாக அமைந்து விடாதிர்கள்......

எதிர்காலத்தில் உங்கள் பேரன் பேத்திகள் உங்களை datuk என்றும் nenek என்றும் அழைக்கும் ஒரு சூழலை உருவாக்கி விடாதிர்கள்.

வெள்ளி, 5 டிசம்பர், 2008

தமிழ்ப்பள்ளி

www.tamilusi.blogspot.com என்ற வலைப்பதிவில் இடம்பெற்ற விமர்சனம் கீழ் வருமாறு :
Wednesday, December 3, 2008

தமிழ் நாளிதல்கள் அடிக்கும் கோமாளி கூத்து
ஒரே மொழி பள்ளி முறையை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டத்தோ முக்ரிஸ் மகாதீர் கூறிய பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ் மொழி பற்றாளர்கள் கருத்துகளை வெளியிட்டு இரண்டு நாட்களாக தமிழ் நாளில்தல்கள் அடிக்கும் கூத்து தாங்கமுடியவில்லை. தமிழ் பள்ளிகளை மூடிவிடுவதே சரி என்பது என் கருத்து.

ஏன் தமிழ் பள்ளிகளை மூடி விடவேண்டும்? பல காரணங்கள் சொல்கிறேன்..........
நூறுக்கு தொண்ணுற்று ஒன்பது தமிழ் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். குறிப்பாக தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள். மேடை, வானொலி, தொலைக்காட்சி-யில் பேசும் தமிழ் மொழி அறிஞர்கள் பலர் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு ஆணுப்பியவர்கள். இன்று தமிழ் நாளிதல்களில் கண்டன அறிக்கை விடும் பல தலைவர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பியவர்கள். மலேசியாவில் இந்திய ஆய்வியல் துறை உள்ள ஒரே பல்கலைகழகம் என்று பீத்தி கொள்ளும் பல்கலைகழக விரயுரையளர்கள், பேராசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள். தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய கடமை உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் இளைஞர் மன்ற தலைவர்கள், இந்து சங்க தலைவர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள். தமிழ் பள்ளிகள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லாத போது நம் நாட்டில் ஏன் தமிழ் பள்ளிகள் வேண்டும். எனக்கு தெரிந்த வரை சாமிவேலு மற்றும் சரவணன் தவிர பெரும்பாலான தலைவர்கள் (சுப்ர, பண்டிதன், palanivelu, டிஏபி, பிபிபி, கெரக்கான், கேஅடிலன் தலைவர்கள் உட்பட) மற்றும் பலர்தங்கள் பிள்ளைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பியவர்கள்.


தமிழ் மொழி வளர தமிழ் பள்ளிகள் மட்டும் போதும் என்பது ஒரு மூட நம்பிக்கை. அமரர் அன்பானந்தன் அவர்கள் காலத்தில் வாசிக்கும் பழக்கத்தை பெரும் அளவில் இளைஞர்களிடையே ஊக்குவித்து வந்தார். அன்று பலர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் படிக்கும் எழுதும் திறமை கொண்டவர்களாக இருந்தனர். இன்று வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த இயக்கமும், கட்சியும், சங்கமும் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இன்றைய தலைவர்களுக்கு தேவை, எப்படி பணம் பண்ணுவது, இளைஞர்களை வைத்து எப்படி அரசியல் பண்ணுவது. அன்று பெரும்பாலனவர்கள் வீட்டில் கல்கண்டு, விகடன், குமுதம், மாத நாவல்கள் என்று படிப்பதற்கு இருக்கும். வாரம் அல்லது மாத தமிழ் இலக்கிய கூட்டங்கள், கலந்துரையாடல் நடக்கும். மொழி வளர்க்க பெரும் முயற்சிகள் நடக்கும். அனால் இன்று மொழி வளர்பதற்கு தலைவர்கள், இயக்கங்கள் போதுமான முயற்சிகள் செய்வதில்லை. அழகு ராணி, வேட்டி ராஜா, சினிமா பாடல் போட்டி போன்றவையே இன்றைய கலாசாரமாக போய் கொண்டிருக்கிறது. மொழி அறிவு வளராத எந்த சமூகமும் உருபடாது என்பது அறிந்தும் மொழி வளர்க்க வேண்டிய கடமையில் உள்ளவர்கள் கடமை செய்யாமல் இருபது மகா கேவலம். போதாத குறைக்கு சிவாஜி திரைப்பட பிரிவியு ஷோ காண்பதற்கு முதல் ஆளாக செல்வார்கள் அல்லது துணிகடை, சாப்பாட்டு கடை திறப்பு விழாவுக்கு செல்வார்கள். அண்மையில் மக்கள் தலைவர் ஒருவர் பி ஜெ-யில் பாப் திறப்பு விழாவுக்கு தலைமை தாங்கினார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். எப்படி மோசமான சமுதாயதிற்கு ஏன் தமிழ் பள்ளி வேண்டும்.


இன்று பி.எம்.ஆர், எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம் எழுதும் மாணவர்களுக்கு சந்தையில் தமிழ் மொழி தேர்வு வழி காட்டி நூல் கிடையாது. எப்போதாவது பட்டத்துக்கு பிந்திய ஆசிரியர்கள் பயிற்சி மாணவர்கள் சில தேர்வு வழி காட்டி நூல்கள் எழுதுவார்கள். அதும் எல்லா மாணவர்களுக்கும் கிடைக்காது. இந்த எஸ்.தி.பி.எம். பரிட்சைக்கு தமிழ் எடுக்கும் மாணவர்கள் கதி அதோ கதிதான். ஒரே ஒரு தமிழ் கோவை இருக்கும். அதுவும் மீசியும்மில் உள்ளது போல யார் கையிலாவது இருக்கும். அதை வாங்குவதற்குள் பரிட்சையே முடிந்துவிடும். இதில் வேடிக்கை என்ன வென்றால் என்ன படிக்க வேண்டும் என்றே பல மாணவர்களுக்கு தெரியாது. எஸ்.தி.பி.எம்.-க்கு டேக்ஸ் புத்தகமும் கிடையாது. அனால் தமிழ் படி, தமிழ் படி என்பார்கள். இன்று வரை எந்த அரசியல் கட்சியாவது, தமிழ் இயக்கமாவது தமிழ் தேர்வு வழி காட்டி நூல் எல்லா தமிழ் எழுதும் மாணவர்களுக்கு கிடைக்கும் வகை பற்றி அக்கறை உள்ளதா? பல மாணவர்கள் தமிழ் பரிட்சை எழுதாதற்கு காரணம், என்ன படிக்க வேண்டும் என்று தெரியாததே.... இந்த சிக்கலை போக்குவதற்கு எந்த தலைவராவது பேசி இருப்பாரா? தமிழ் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு சிக்கல்கள் பல உள்ள போது ஏன் நமக்கு தமிழ் பள்ளிகள் ?
என் உறவினர் ஒருவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள். அனைவரையும் மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பினார். காரணம் கேட்டபோது , அவர் பிள்ளைகளை டாக்டர் ஆக்க வேண்டும், என்ஜிநீர் ஆக்க வேண்டும் என்றார். நான், ஏன் தமிழ் பள்ளிக்கு அனுப்பினால் மகள்கள் டாக்டர், எஞ்சினியர் ஆகாதா என்று கேட்டேன். அதற்க்கு அவர், உங்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் வேண்டுமானாலும் படிக்க வையுங்கள், என் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். தமிழ் பள்ளியில் படித்தால் தங்கள் பிள்ளைகள் முட்டாள் ஆகி போகும் என்று கருதும் மானங்கெட்ட இந்த சமுதாயத்திற்கு ஏன் தமிழ் பள்ளி வேண்டும்.
நம் குறைகளை முதலில் களைய முற்படுவோம். பிறகு சண்டைக்கு தயார் ஆவோம். கத்தி இல்லாமல் போருக்கு சென்று பயன் இல்லை.


என் கருத்து :
  1. மற்றவர்களை மாற்ற முனைவோம். ஆனால் அவர்கள் மாறுவார்கள் என்று சட்டம் இல்லை.அவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் நாம்அனுப்பக்கூடாதா ? நமக்கு என்று கொள்கை கிடையாதா ? அனுப்பாதவர்கள் சிலரே ......மாறாக தமிழ்ப்பள்ளியை நம்பி அனுப்பும் பெற்றோர்கள் பலர்....... சிலரைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை.
  2. மொழி அறிவு வளராத எந்த சமூகமும் உருபடாது என்பது அறிந்தும் மொழி வளர்க்க வேண்டிய கடமையில் உள்ளவர்கள் கடமை செய்யாமல் இருபது மகா கேவலம் என்று குறிப்பிட்ட நீங்கள் தமிழ்ப்பள்ளியை மூடினால் தமிழின் வளர்ச்சி மேலும் பாதிப்படையும் என்று நீங்கள் உணரவில்லையா....! இந்நாட்டில் தமிழ் மொழி வளர தமிழ்ப்பள்ளிகள் அடித்தளமாக இருக்கின்றது என்பதனை யாரும் மறுத்து விட முடியாது.
  3. தமிழ் பரிட்சை எழுதுவதற்கு மட்டும் நாம் தமிழை படிக்க வில்லை. தமிழ் மேல் உள்ள பற்றால் நாம் தமிழ் கற்கின்றோம். பரிட்சைக்கு படிக்க வேண்டும் என்றாலும் அதற்கு தேவையான நூல்கள் எளிதான முறையில் நம் நாட்டில் கிடைக்கும். பலர் சிறப்பான முறையில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  4. மானங்கெட்ட இந்த சமுதாயத்திற்கு ஏன் தமிழ் பள்ளி வேண்டும் என்று எழுதியுள்ளிர்கள். நீங்களும் அந்த சமுதாயத்தில் ஒரு அங்கம் என்று மறந்து விடாதீர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதையும் சாதிக்க வில்லையா ?பிறகு என் தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் வெகுவாக அதிகரித்து வருகிறார்கள்...?
  5. நம் குறைகளை முதலில் களைய முற்படுவோம் என்று சொல்கிறிர்கள்...... யார் சரி செய்வது......உங்களுக்கும் அந்த கடமை இல்லையா...யாரோ ஒருவர் வந்து சரி செய்வார் என்று காத்திருப்போமா.....நம்மால் முடிந்ததை செய்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாதா ?
  6. தமிழ்ப்பள்ளியை மூடினால் பிரச்சனை சரியாகி விடுமா?தமிழ் பள்ளியை மூடினால் தமிழ் எவாறு வளரும் ?
  7. தேசியப் பள்ளியை நம்பி தமிழ் வளருமா ?

உங்க்கள் விமர்சனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

(அடுத்த பகுதியில் மேலும் வளரும்)

செவ்வாய், 2 டிசம்பர், 2008

அரசியல் பலம்

  1. இந்த நாட்டில் நாம் வலிமையாக வாழ வேண்டுமா ?
  2. அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு நாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு .....இதற்கு எந்த அரசியல் கட்சியின் உதவியும் தேவையில்லை..
  3. நீங்கள் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதிகமானோர் வாக்காளராக பதிவு செய்யாமல் இருப்பதால் பல தேர்தல் தொகுதிகளில் நம்மை ஒரு முக்கிய இனமாக எந்த கட்சியும் மதிப்பதில்லை.
  4. இது நம்மால் செய்ய முடியும் ஒரு காரியம்.இந்த சிறிய முயற்சி நமக்கு எதிர்காலத்தில் பல பெரிய நன்மைகளை ஈட்டி தரும்.
  5. நம்முடைய அரசியல் பலம் கட்சி அல்ல. வாக்காளராக இருப்பதே ஆகும்.
  6. சிந்தித்து செயல்படுவோம்.