ஞாயிறு, 30 நவம்பர், 2008

தமிழ் நாளிதழ் வாங்குவோம்

மலசியாவில் 20 லட்சம் தமிழர்கள் வாழ்கிறோம்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்று வைத்துக்கொண்டால் ஐந்து லட்சம் குடும்பங்கள் உண்டு.
இவர்களில் மூன்று லட்சம் குடும்பம் மட்டும் தினமும் தமிழ் நாளேடு வாங்கினால் நமது தமிழ் தினசரிகள் அதிகமாக விற்கப்படும்.
இவ்வாறு நடந்தால் நமது மொழி இந்த நாட்டில் செழித்து நிற்கும்.
இந்த துறை அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
அதிகமான எழுத்தாளர்களை உருவாக்கும்.
அதிகமான தமிழ் வாசகர்கள் கொண்ட ஒரு சூழலை உருவாக்கும்.
அதிகம் பக்கம் கொண்ட நாளிதழை நாம் வாசிக்கலாம். சிந்திப்போம்.....கைகொடுப்போம்.......
நம் மொழிக்காக....
நம் அடுத்த தலைமுறைக்காக....
இது நம்மால் சாதிக்க முடியும்.....
சிறிய சிறிய மாற்றம்........நம்மால் ஏற்படுத்தக்கூடிய மாற்றம் ...
எதோ நம்மால் முடிந்ததை செய்வோம்....
எல்லாமே நம் கையில்

1 கருத்து:

  1. ஐயாவின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதே. நல்லதொரு கருத்தை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு